Friday 27 March 2020

மேட் இன் சைனா !!




மேட் இன் சைனா

அது ஒரு ரம்யமான மாலை பொழுது, தினகரன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தான். மனைவி "ராதிகா" தீட்சண்யமான விழிகள் மட்டும் அல்லாமல் சிந்தனையும் கொண்டு இருப்பவள். இவர்கள் பேச்சுக்கு மத்தியில் பீறிட்டுக்கொண்டு கேட்டது ஒரு சிசுவின் அழுகை சத்தம். பிறந்து பத்து நாட்களே ஆன தங்களுடைய மகள் மிருணாளினியின் குரல். பசியில் தான் அழுகிறாள்  என உணர்ந்த ராதிகா, சீக்கிரம் கிளம்புங்க நம்ம சிட்னில சீக்கிரமே லாக் டௌன்னு பேசிக்கிறாங்க. நாம வேற கை குழந்தையை வெச்சிருக்கோம். வேகமா போயி சூப்பர் மார்க்கெட் ல டிஸ்சு  பேப்பர் , அரிசி, பருப்பு, பிரெட் வாங்கிட்டுவாங்க" என்றாள் ராதிகா. அதற்கோ தினகரன், இப்படியே ஆளாளுக்கு பயந்து இப்படி அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டேபோனா, வயசானவங்க, மாற்று திறனாளிகள்லாம் என்ன பண்ணுவாங்க "ராதி" என கரிசனத்துடன் வினவினான்.

"ஏங்க மத்தவங்க யாரும் பண்ணாத வேலையா நாம பண்றோம்" என தன வாதத்தை முன் வைத்தால் "ராதி". இருந்தாலும் நமக்கு எவளோ வேணுமோ அவளோ மட்டும் வாங்கிட்டு  வரலாமே எனும் "ஜீவானந்த" கொள்கையில் திடமாய் நின்றான் தினகரன்.

நீங்க எப்படியோ போங்க டின்னருக்கு பொங்க அரிசி வேணும், அதைமட்டுமாவது வாங்கிட்டு வாங்க. இந்த ஊரு லோக்கல் ஆஸ்திரேலியன்ஸ் மாதிரி என்னால டெய்லி பிரெட் லாம் சாப்பிடமுடியாது. சீக்கிரம் போங்க, நான் நம்ம அம்முக்கு பால் குடுக்கணும் என்றால் ராதிகா இம்முறை சற்றே அழுத்தமாக.

சிட்னி மாநகரத்து தெருக்கள் இப்படி வெறிச்சோடி போயிருந்ததை பார்ப்பதற்கு கல்யாணம் நடைபெறாத கல்யாண மண்டபம் போல் போல் தோன்றியது தினகரனுக்கு. இதுவும் தற்காலிகம் தான் என தன்னை தானே தேற்றி கொண்டு நடக்க தொடங்கினான்.

கார்த்திகை தீபம் போன்று சாலையெங்கும் தொங்கும் மின் விளக்குகள், இருபுறமும் வாகனங்கள் செல்ல இலகுவாக வெள்ளை நிற கோடுகள், பரீட்சை பேப்பரின் "மார்ஜின்" போல. பாதசாரிகள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் "நடைபாதை" சாலையின் ஓரமாக. தொடர்ந்து நடந்தால் "டிராபிக் சிக்னல்" இங்கு சிவப்பு விளக்கு போட்டால் வாகனம் நின்றுவிடுவதை, ஆறு மாதம் முன்னரே ஆஸ்திரேலியா புலம் பெயர்ந்த தினகரன் இன்னும் மிரட்சியுடனே பார்த்தான் ஒவ்வொரு முறையும் சர்க்கஸ் பார்க்கும் வியப்புடன். "ஜீப்ரா" கிராஸ்ஸிங் எனும் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில முன்னுரிமை பாதசாரிகளுக்கு தான் என்றும், வாகனங்கள் சற்றே வழிவிட வேண்டும் என்னும் "கான்செப்ட்" புலங்கிதத்தை அளித்தது தினகரனுக்கு. வழி நடுவே "கரோனா" பயத்தில் எப்படி மக்கள் பீதியுடன், தேவைக்கு மேல் அத்தியாவசிய பொருட்களை "பதுக்கி" வைத்து கொள்கிறார்கள் என்பதையும், அதனால் தேவையுள்ளவர்கள் குறிப்பாக வயது முதிந்தவர்கள் எப்படி இந்த பொருட்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைந்து நொந்து நடந்து கொண்டு இருந்தான். அந்த சிந்தனையில் மூழ்கி திளைத்தவனின் காதுகளில் ஒரு சத்தம் கேட்டது. எந்த சத்தத்தை கேட்டாலும், இது ஒரு மொழியா இல்லை வெறும் சத்தமா என மனிதனின் மனம் சற்றே ஆராயும் , அதே நிலைதான் தினகரனுக்கும். 10 வினாடிகள் கவனித்து விட்டு அது வெறும் சத்தம் இல்லை, யாரோ ஒரு பெண்மணியின் குரல் என்று புரிந்தது அவனுக்கு. தன் வலதுபுறமாக திரும்பி பார்த்தான். அங்கே தெற்காசிய முகம் ஒன்று தென்பட்டது. சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற முழு கால் சட்டையும் போட்டு கொண்டு ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புரியாத (தினகரனுக்கு புரியாத) பாஷையில் பேசினார். பாஷை புரியவில்லை என்றாலும், அந்த மூதாட்டி தினகரனை பார்த்து தான் சமிஞை செய்கிறார் என்று புரிந்தது தினகரனுக்கு.  அதுவரை "ஜெட்" வேகத்தில் நடந்து கொண்டு இருந்தவன் சற்றே நிதானப்பட்டு அந்த மூதாட்டியிடம் சற்றே அருகில் சென்று "இஸ் எவரித்திங் ஆல் ரைட்" என்று உலக பொதுமொழியாக நாம் பாவிக்கும் ஆங்கிலத்தின் மூலம் விசாரித்தான். அதற்கு அந்த பாட்டியோ புரியாத பாஷயில் பேசினாள் இன்னும் வேகமாகவும் பதட்டத்துடனும். அவர்களுக்கு ஏதோ பிரச்சனை போலும் என்பது புரிந்தது தினகரனுக்கு. மீண்டும் அந்த மூதாட்டியுடன் " டூ யூ நோ இங்கிலிஷ், இங்கிலிஷ், இங்கிலிஷ் என்று மூன்று முறை ஏலமிட்டான். பலன் இல்லை, அந்த மூதாட்டி இன்னும் பதட்டத்துடன் அதே பாஷயில் பேசினார்.  தெற்காசிய முகம் என்றாலே "சீனா" வாகத்தான் இருக்கும் என்ற லாஜிக்கில் "சைனா" ?? என தயக்கத்துடன் கேட்டான் தினகரன். அதற்கு அந்த மூதாட்டி "சைனா, சைனா" என்று அவள் பங்குக்கு ஏலம் போட்டாள். தூக்கி வாரி போட்டது தினகரனுக்கு, அப்போது ஆஸ்திரேலியாவில் "கொரோனா" என்ற உயிர் கொல்லும் வைரஸின் தாக்கம் தலை விரித்து ஆடியது. அந்த வைரஸ் உருவான இடம் "சைனா" என்று உலகெங்குங்கும் நம்பப்பட்டது. இதற்கிடையில் ஒரு சீன மூதாட்டியிடம் நின்று பேசுகிறோமே என்ற எண்ணம் அச்சுறுத்தியது தினகரனை. இவை எல்லாம் ஒரு புறம் இருப்பினும், உதவி தேவைப்படும் நேரத்தில் உதறி செல்வதை மனம் ஏற்க மறுத்தது. மற்றொரு புறம் என்னதான் இருந்தாலும் உயிர்கொல்லி வைரஸ் ஆச்சேய். "அல்லு" இல்லாமலா போகும் எனவே நாசுக்காக "சாரி" என சொல்லிவிட்டு நழுவ நினைத்த வேளையில், அந்த பாட்டியின் ரூபத்தில் தினகரனின் பச்சிளம் குழந்தை தெரிந்தது அவனுக்கு.

ச்சே !! இந்த பாட்டிக்கு என்ன தான் பிரச்சனையில் இருக்கிறாள் என்று தெரியாமல் விட்டுச்செல்வது அழும் குழந்தையை அப்படியே அழவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்று தோன்றியது தினகரனுக்கு. அந்த பாட்டி இவனுடைய உடல் மொழியில் இருந்து தினகரன் அவளுக்கு உதவ நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள். உடனே தன் கையில் இருக்கும் ஆப்பிள் போனை காண்பித்து ஏதோ சொன்னாள். வழக்கம் போல தினகரனுக்கு புரியவில்லை. இன்னொரு முறை "இங்கிலிஷ்" என்றால் பிரயோஜனம் இல்லை என்று , ஆங்கிலத்துடன் சமிக்கை மொழியில் பெபட ஆரம்பித்தான் . பாட்டியின் போனை நோக்கி என்ன என்று " தம்பஸ் அப்" சின்னத்தை பக்க வாட்டில் காட்டி உலுக்கினான். பாட்டி இம்முறை அவள் போனின் ஸ்க்ரீனை இவளிடம் நீட்டினாள். கண்ணை கூசும் வெளிச்சம், தெருக்களின் வடிவம் போன்ற கோடுகள், ஆங்காங்கே சீன எழுத்துக்கள் , அய்யயோ " மேப்ஸ்" கூட "சைனீஸிலா" முடியல என்று நொந்துகொண்டான். அனால் அந்த பாட்டி வழி தவறி வந்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டான். வழி காட்ட வழி என்ன என்று யோசித்தான்.

சுற்றி முற்றி பார்த்தான் , அருகில் வேறொரு தெற்காசிய முகம் தென்பட்டது அந்த வெறிச்சோடிய சாலையில், அந்த நபரிடம் "டூ யூ நோ சைனீஸ் , திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். என்னமோ  இவன் பேசியது அனைத்தும் புரிந்தாற்போல் பாட்டியும் தினகரனை "சப்போர்ட்" செய்வது போல் தலையை ஆட்டினாள். அந்த மூன்றாவது நபர் "சாரி, ஐ அம் கொரியன் , நோ சைனீஸ் என்றார். முதல் துருப்பு சீட்டு "மொக்கை" வாங்கியதே என மனம் வெந்தான் தினகரன். இருப்பினும் மனம் தளராமல் பாட்டியை தன்னோடு நடக்குமாறு சைகை செய்தான். பாட்டியும் பச்சிளம் குழந்தை போல் , இவன் உதவி செய்வான் எனும் நம்பிக்கையில் கூடவே நடக்க தொடங்கினாள்.  வழியில் மற்றொரு டெஹ்ரகசிய முகம், மற்றொரு நம்பிக்கை , மறுபடியும் "சைனீஸ்" தெறியுமா என்ற கேள்வி. இம்முறை அந்த நபர் அந்த பாட்டியிடம் ஏதோ சொன்னார். பாஷை புரியாத தினகரன் அவர் சைனீஸில் தான் பாட்டியுடன் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு மகிழ்ந்தான்.  ஆனால் பாட்டியின் முகத்தில் மட்டும் "நெற்றி சுருக்கம்". ஒன்றும் புரியவில்லை தினகரனுக்கு. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள "டிட் யூ ஸ்பீக் இந்த சைனீஸ் " என்றான். அதற்கோ அவர் மிகவும் கூலாக , "ஐ டோலடு ஹர் தட் ஐ டோன்ட் நோ சைனீஸ் இன் சைனீஸ்" என்றார். மற்றும் ஒரு பேரிடி. இவன் நம்மைப்போல் ஹிந்தி பேச தெரியாமல், "ஹிந்தி நஹி மாலும்" என்று எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை மற்றும் ஹிந்தியில் கற்று வைத்திருப்போமே அதுபோல். சரி ஒரு பயனும் இல்லை என்று நினைத்து கொண்டு பாட்டியுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். தினகரன் மனதில், இந்த பாட்டியை வேறு கூடி சுற்றுகிறோமே , எங்கிருந்து உதவி கிடைக்கும், ஒரு வேளை கிடைக்கவில்லை என்றால் இந்த பாட்டியிடம் எப்படி சொல்லி சமாளிப்பது என்ற எண்ணம் சிறுதளவு கூட இல்லை. மாறாக எப்படியாவது உதவி செய்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது. அந்த எண்ணம் அவனை கொஞ்சம் கூட தளர்வடையாமல் முன் செல்ல உந்தித்தள்ளியது.

சற்று தொலைவு நடந்தவுடன் அந்த சாலையின் முனையில் "ஷேர் டீ" என்று கூறப்படும் தெற்காசிய வகையான "மில்க் டீ" எனப்படும் குளிர்ந்த பாலில் சில பழ வகைகள் போட்டு தயாரிக்கும் பானம் விற்கும் இடம். கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி காரணம் அந்த கடாயில் வேலை செய்யும் ஒரு பெண் தெற்காசியர் போன்று இருந்தாள். தயக்கமின்றி மீண்டும் " கேன் யூ ஸ்பீக் சைனீஸ், திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். உடனே அந்த பெண் பாட்டியிடம் சரளமாக பேச தொடங்கினாள். கடந்த 20 நிமிடத்தில் அந்த பாட்டியின் முகத்தில் முதன்முறையாக சிரிப்பை பார்த்தான் தினகரன். பாட்டியின் துயர் துடைக்க வழி கிடைத்து விட்டது என்று இவனுக்கு புரிந்துவிட்டது. 5 நிமிடம் பேசிமுடித்த அந்த பெண்ணிடம், பாட்டிக்கு என்ன பிரச்சனையாம் என்று கேட்டான். அடப்பாவி, இது தெரியாமத்தான் பாடிய கூட்டிட்டு சுத்துறியா என்று ஆச்சரிய பார்வையுடன் பேச தொடங்கினாள் அந்த பெண். அந்த பாட்டி தன் மகளின் வீட்டுக்கு இரண்டு நாடுகளுக்கு முன் வந்ததாகவும், வாக்கிங் வந்த இடத்தில் வழி மறந்து விட்டதாகவும், அந்த சமயம் தன் நீங்கள் வந்து உதவியதாகவும் கூறினாள் என்றும் சொன்னாள். சொல்லிவிட்டு, அந்த பாட்டியின் கை பேசியில் எண்களை அமுக்கி அந்த பெண் ஏதோ பேசினாள். பேசியது அந்த பாட்டியின் மக்களிடம் தான் என்றும், அந்த மகள் இன்னும் 15 நிமிடங்களில் வந்து பாட்டியை அழைத்துச்செல்வார் எனவும் தெரிவித்தாள். கேட்ட தினகரனுக்கு ஒரு இனம் புரியாத திருப்தி. 

சற்று திரும்பினால், நன்றி நிறைந்த கண்களுடன், கண்ணீர் மல்க தன் இரு கரங்களை கூப்பி, குனிந்து வணக்கம் போல் சமிக்கை செய்த பாட்டி "சைனீஸில்" ஏதோ சொன்னார் தினகரனிடம். இம்முறை மட்டும் ஏனோ அவனுக்கு அது புரிந்தது. தினகரன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான், தன் கைபேசியில் உள்ள தன் குழந்தையின் முகத்தை பார்த்து புன்னகையுடன்.

மனிதம் மலரட்டும் !!

நேசமுடன்,
நெ செ

Wednesday 25 March 2020

தாய்க்கு ஒரு கவிதை


செய்திகள் வாசிப்பது !!




செய்திகள் வாசிப்பது !!


வணக்கம் செய்திகள் வாசிப்பது, பிரபாகரன் !! என்று உரக்க முணுமுணுத்தது தான் தாமதம் , "நீ எல்லாம் திருந்தவேமாட்டியா ? தூக்கத்துல கூடவா நியூஸ் வாசிக்கிற மாதிரி உளறுவ ? என்று அவனை நோக்கி பாய்ந்தது அன்னையின் தோட்டா !! பிரபாகரனுக்கு செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் சிறுவயது கனவு. அதனால் தான் என்னமோ இன்னும் கனவுகளில் மட்டுமே செய்திகள் வாசித்தது கொண்டு இருக்கிறான்
ஐடி வேலைக்கு போக வேண்டும் என்பது தான் சராசரி குடிமகனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை பக்கத்து வீட்டு நைட்டிபோட்ட அம்மணி அறிவுரையாக சொல்லும் வரை வந்துவிட்டது பிரபாகரனின் நிலைமை. சரி விடுங்கள் என்ன செய்வது லட்சங்களின் பின் ஓடுபவர்கள் மத்தியில் லட்சியத்தின் பின் ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அம்மாவின் வசை கேட்டு தூக்கம் களைந்து எழுவதற்குள் , தகப்பன் சாமி தன் பங்குக்கு அர்ச்சனைகளை அள்ளி தெளித்தார். "இவன்லாம் முன்னேறுவாங்கிற நம்பிக்கை எனக்கு இவன் மேல சின்ன வயசுல இருந்தே இல்ல . டிவி-ல சினிமா நடுவுல நியூஸ் வந்தா எல்லா குழந்தையும் எழுந்து விளையாட போயிடும் , இவன் மட்டும் தான் டிவி கிட்ட போயி உக்காந்துப்பான்
இதை கேட்டவுடன் தன் குழந்தை பருவ நினைவுகளை மெல்ல அசைபோட்டேன் பிரபா!! ஐந்தாம் வகுப்பு தமிழ் பீரியடில் , “எல்லாரும் வருங்காலத்துல என்ன ஆகா போறீங்க ?” என்று சரோஜா டீச்சர்  கேட்டதற்கு , நான் நிஜந்தன் மாதிரி நியூஸ் ரீடர் ஆகப்போறேன் என்று சொன்னவன் பிரபா . சுற்றி இருந்த மாணவர்கள் விண்ணில் இறங்கி வந்த மனிதனை போல் பார்த்தனர் இவனை. சொல்வதறியாத சரோஜா டீச்சரும், “சரி உக்காரு என்றார். பிரபாவுக்கு மட்டும் அல்ல , இவனை போன்ற லட்சியவாதிகளுக்கு இன்னும் இப்படி பட்ட நிலை தான். எங்க விட்டா இவங்களை எல்லாம் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கும் உண்டு
ஒரு வழியாக நித்திரை கலைந்தவன் சித்திரை நிலவு போல் மலர்ந்தான். காலை 8 மணி செய்தியின் தொடக்க இசை கேட்டதும் , டீவியை சத்தமாக வைத்து "புதிய தமிழகம்" செய்தியாளரை ரசித்தான். "காலா" படத்தில் ரஜினியின் தொடக்க காட்சியையே கூட இவன் இப்படி ரசித்ததில்லை. வாசிப்பாளர் சொல்லும் ஒரு சில வார்த்தைகளை மனதுக்குள் சொல்லிச்சொல்லி சுவைத்தான் தேன் மிட்டாய் போல்
செய்திகள் முடிந்ததும்செல்பிவீடியோ வில் இன்றைய செய்திகளை வாசித்து பதிவு செய்தான் பிரபா. நித்தம் பல் துலக்குவது போல் இது இவனின் தினசரி வாடிக்கை
BA (ஜௌர்னலிசம்) படித்திவிட்டு, செய்தி வாசிப்பாளர் வேலைக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்து வீட்டிலியே அமர்ந்திருக்கிறான் 3 வருடங்களாக. சேலை இல்லா பெண்ணை விட வேலை இல்லா ஆண், சமுதாய பார்வையில் மிகவும் மோசமாக காணப்படுகிறான்
இவன் தினசரி வேலை அம்மாவுக்கு காய்கறி வாங்கி தருவது, வீட்டு வேலைகளில் உதவி செய்வது, அத்தோடு நில்லாமல் அப்பாவின் பையிக்கை துடைப்பது, மாதாந்திர வீட்டு கணக்கு மற்றும் தஸ்தாவேஜுகளை சரி பார்ப்பது. எனக்கு என்னமோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவனை விட இவன்தான் நிறைய வேலை செய்கிறான் என்று தோன்றுகிறது (அலுவலகத்தில் வேலை செய்தால் வாரம் 2 நாட்கள் விடுமுறையாவது கிடைக்கும்)
அதன் படியே இன்றும் காய்கறி வாங்க "பழமுதிர்சோலை" சென்றபோது "முன்னாள் செய்தி வாசிப்பாளர் " திருமதி ஷோபனா ரவியை "தரிசிக்கும்" வாய்ப்பு கிட்டியது.
மணியே இல்லாத தன் பர்சில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டின் பின்புறத்தை திருப்பி அதில் ஷோபனாவிடம் ஆட்டோகிராப் கேட்டான் - பேச வார்த்தைகள் இன்றி
திருப்பதி வெங்கடாசலபதியின் நொடி நேர தரிசனத்தை காட்டிலும் மேலாக நினைத்தான் இந்த சந்திப்பை !!
ஷோபனா ரவியும் திகைப்புடனும், புன்னகையுடனும் ஆட்டோகிராப் போட்டு ,  "ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி விரைந்தார் பாம்பின் கால் பாம்பே அறியும்
திரும்பி வரும் வழியில் உச்சகட்ட மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தான் பிரபா. ஆடுகளம்தனுஷைபோல் லுங்கியை தூக்கி ஆடாதது ஒன்று தான் குறை. இல்லம் திரும்பி இந்த செய்தியை தன் தாயிடம் சொல்லி மகிழ்ந்தான். என்னதான் தீட்டினாலும், மகனின் சிரிப்பை விட மகிழ்ச்சி தாய்க்கு வேறு எதுவும் இருந்து விட முடியாதல்லவா

10 நாட்கள் கழித்து அத்தி பூத்தார் போல் "சன் செய்திகளில்" செய்தி வாசிக்க நேர்காணல் அழைப்பு வந்தது பிரபாவிற்கு. பல வருடம் கழித்து கருவுற்ற தாயின் மனநிலை தான் இவனுக்கும். +2  பரீட்சைக்கு படிப்பது போல் இரவு பகல் தயார் செய்தான். ஊரில் இருக்கும் அனைவருக்கும் சொல்லிவிட்டான் இந்த நற்செய்தியை.
இறுதியாக அந்த நேர் கானல் நாளும் வந்தது. 4 மணிக்கே அலாரம் இல்லாமல் எழுந்தான். காலை கடனை முடித்துவிட்டு , பரீட்சை அறை வெராண்டாவின்கடைசி நொடி பயிற்சியாக , டிவியில் சன் செய்திகளை பார்த்துவிட்டு . இரவல் பைக்கில் ஏறி, கனவுகளை தன் பின்னால் ஏற்றி, "வெற்றி நிச்சயம்" என்ற அண்ணாமலை திரைப்பட பாடலை தன் ஹெட் போனில் லூப் மோடில் கேட்டபடி பயணித்தான்.
கற்பனை குதிரையின் வேகத்தில் பைக்கை செலுத்தியதால் , எதிர் பாராத விதமாக பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நாட்டுப்புற கல்லில் தலை மோதியது. தலைக்கவசம் அணிந்திருந்தும் கழுத்தில் காயமுற்று ரத்த வெள்ளத்தில் மிதந்தான்
"ICU" வின் பீப் சத்தம் இனம் புரியா பயத்தை தந்தது பிரபாவின் பெற்றோருக்கு !! உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை , ஆனால் கழுத்தில் பலமா அடிபட்டதால, Vocal Chord ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு. இனிமே இவரால் பேச முடியாது" என்ற டாக்டரின் சொற்கள் ஆயிரம் தோட்டாக்களை மார்பில் தாங்கிய வலியை தந்தது. இதை ஜீரணிக்க முடியாமல் தவித்தான் பிரபா. கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் பட்ட காயங்கள் மட்டும் குணமடைந்தது.. உயிர் மட்டும் எஞ்சிய உடலாய் இருந்தான்,  பிரபா
இனிமேல் உன் கனவுகளை மூட்டை கட்டி விட வேண்டுமா? “என்று அவன் ஆழ் மனம் அவனை சத்தமாய் கேள்வி கேட்டது. என்ன செய்ய அதற்கு பதில் கூற குரல் இல்லை !!
விரக்தியின் விளிம்பில் நின்ற பிரபாகரன் , அழ தண்ணீர் இன்றி கோடை கால சென்னை போல ஆனான்.
ஒரு நாள் மொட்டை மாடி கட்டை சுவற்றில் ஏறி நின்றான். இந்த வாழ்கை அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டதோ என்ற பயத்துடன் கீழே பார்த்தான் 4 மாடிகளின் பள்ளம். கண்களை மூடினான்.



"வணக்கம் செய்திகள் வாசிப்பது" என்று வழக்கம் போல டிவி செய்திகள் அலறியது. பிரபாவின் அம்மாவும் அப்பாவும் உடனே டிவி யின் அருகில் சென்று அமர்ந்தனர். அன்று செய்திகள் வசிப்பது நம் பிரபா-விற்கு மிகவும் பிடித்த ஒரு பெண் வாசிப்பாளர். சற்றே இவர்கள் கண்கள் டிவி யின் வலது மேல் முனைக்கு திரும்பியது !! அந்த திரையில் பிரபா தன் கைகளை அசைத்து சமிஞை மொழியில் செய்திகளை வாசித்து கொண்டு இருந்தான்.
ஆம் பிரபாகரன் இப்போது ஒரு சமிஞை மொழி செய்தி வாசிப்பாளர் !!  குரல் போனாலும் அவன் குணம் மாறவில்லை. அவன் அறையில் உள்ள "வெறும் கை என்றால் அது முட்டாள்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வாக்கியம் மீண்டு பலித்தது
சமிஞை மொழி செய்திகள் வாசித்து இன்று சாதனை படைத்துவிட்டான் பிரபாகரன்.
அது சரி இந்த பெயருக்கு போராட்டங்களும் , சாதனைகளும் புதிதில்லையே !!

When the going gets tough, the tough gets going!!

மூலக்கதை  - சீனுவாசன்
தொகுப்பு - நெ செ

****மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு அகலாத எங்கள் நண்பன் சீனிவாசனின் மூலக்கதையை சிறுகதை வடிவில் உருப்பெற செய்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்***

சிட்னிக்கு நேரமாச்சு !!





சிட்னிக்கு நேரமாச்சு !!


கம்பெனி செலவுலயே சிட்னிக்கு ஹனி-மூன் போற..... என்று உடன் வேலைசெய்யும் திலிப் கிண்டலாக சொல்ல, பாஷை புரியாதவன் போல் , வேக வேகமாக கணினியை தட்டிக்கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் பாலு.
சற்றும் மனம் தளராத திலீப் , “பாலு இப்போ எல்லாம் மதுரையே சிட்னியா மாறபோதுன்னு சொல்றாங்க .. நீ என்னடானா சிட்னிக்கு போறியேஎன்றான்
அதற்கோ பாலு – டேய் ராஜு.. சாரி ராஜா , மதுரை சிட்னி ஆகுறதுக்குள்ள நான் சிட்னி போய்ட்டு வந்துடுவேன் டா ..என்று நக்கலாய் சொன்னான் (என்ன இருந்தாலும் நம்மை ஆள்பவர்கள் மீது இவனுக்கு இருக்கும் அசரா நம்பிக்கையை நாம் பாராட்டத்தான் வேண்டும் )

ஐடி கம்பெனியில் வாழ்பவர்களுக்கு (வாழ்பவர்கள் தான், ஏன்னா இவங்க எப்போதாவது தான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கே போவாங்க !! ) இவர்களுக்கு ஒரே லட்சியம், கனவு ..Onsite” - Onsite என்றால் இங்கிருக்கும் அதே வேலையை வெளிநாடு போய் பார்ப்பது. இவர்களை சொல்லியும் தவறில்லை .. "திரைகடல் சென்றால் திருமணம் உண்டாம்" என்பதுதானே புது மொழி !

வெளிநாட்டு வேலையில் பெரிய வித்தியாசம் - லட்சங்களில் சம்பளம் .. அதற்கான விலை.. - சம்பளத்தை தவிர வாழ்க்கையில் மற்ற அனைத்தும்.
இதற்கிடையில் பாலுவின் அலைபேசி அலற.. சுளுக்கு பிடித்த தலை போல் ஒரு பக்கமாக சாய்த்து அலைபேசியில் .. "சொல்லுடா செல்லம்" என்று கொஞ்சலானான் .. இன்னைக்குள்ள டிக்கெட்ஸ்லாம் வந்துடும் னு நினைக்கிறன்.. பேக்கிங்-லாம் பண்ணியாச்சுல என்று சொல்லி...சத்தம் இல்லாத முத்தம் தந்து பேசி முடித்தான்.

இதை பார்த்த (கேட்ட) திலிப் உடனே, இந்த புதுசா கல்யாணம் ஆனவங்க தொல்லை தாங்க முடியல டா என்று நக்கலடிக்க . பாலு உடனே .. டேய் நாங்க எல்லாம் பேமிலி டா ..என்று சொல்லி புன்னகைத்தான்
மச்சி உனக்கு ஆம்லெட் தியரி தெரியுமா என்று திலீப் கேட்க, அதற்கு பாலுவோ தெரியாது என மண்டை ஆட்ட.. இது கல்யாணம் பத்தின ஒரு Theory டா  என்று மேலும் பேச தொடங்கினான் திலீப்

பொண்டாட்டி போடுற ஆம்லெட்ல நல்ல வறுத்த வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு ஜம்முனு இருந்தா, அவங்களுக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் கூட ஆகல-னு அர்த்தம் . அதுவே வறுக்காத வெங்காயத்தை ஆம்லெட்ல போட்ட 3 வருஷம் முடிஞ்சிருக்குனு அர்த்தம்.. இதுவே வெங்காயம் மிஸ் ஆயி பெப்பர் மட்டும் இருந்த 5 வருஷத்தை தாண்டிட்டாங்கனு அர்த்தம் ..

பாலு திலீப்பை பார்த்து.. இவ்ளோ சொல்றியே அப்போ உங்க வீட்ல எப்படி மச்சி என்று கேட்க அதற்கு திலிப், “எங்க வீட்ல ஒம்லெட்ல முட்டையே மிஸ்ஸிங் மச்சி. என்று கண்கலங்க சொல்ல., பாலு கொல் என்று  சிரித்தான் .. மனதிற்குள் மைன்ட் வாய்ஸ் .. " பேசாம சைவமா மாறிடு பாலு" என்றது ...
மறுநாள் டிக்கெட் வந்த சந்தோஷத்தில் பாலுவின் மனைவி காயத்ரியும் , "தன"பாலுவாக மாறவிருக்கும் களிப்பில் பாலுவும் திளைக்க , உற்றார் உறவினர் புடைசூழ்ந்து சென்னை விமான நிலையம் வந்து வழியனுப்ப அடுத்த நாளே சிட்னிக்கு புறப்பட்டனர்.
விமானத்தில் ஏறியவுடன் ஏசி காற்றுக்கு காயத்ரியும் ஏர் ஹோஸ்டஸ் வருகைக்காக பாலுவும் அலைமோத .. மேக அலைகளில் போதையுற்ற விமானம் மெதுவாக தள்ளாடியது. "Safety Announcement” சொல்லும்போதே கவனிக்காம விட்டுட்டோமே என்று அஞ்சிய பாலுவின் வியர்வை சட்டை வழியே பேண்டை பதம் பார்க்கும் முன், விமானம் தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டது.
அருகிலே இருந்த காயத்ரி "ஐ நீட் சம் Space” என்று கேட்க .. பாலுவோ , கல்யாணம் ஆகி 2 மாசத்துல உனக்கு எவ்ளோ சுதந்திரம் குடுத்திருக்கேன் அப்படி இருந்தும் என்னை பாத்து Space வேணும்னு கேக்குறியே. மத்த வீட்ல எல்லாம் போயி பாரு.. உனக்கு புரியும் என்றான் (பாவம் அம்பலம் ஆடும் நடராஜரை போல் சம்பளம் வாங்கி ஆடிய விமானத்தின் தாக்கம் இவனை விட்டு இன்னும் போகவில்லை). அதற்கு காயத்ரி, லூசா பா நீ !! Flight-ல லெக் space பத்தலைனு சீட் மாறி உக்கார சொன்னா, பயபுள்ள எப்படி எல்லாம் பேசுற என்று முகத்தை திருப்பி அமர்ந்தாள்
பின்பு இவர்களை விமான பணிப்பெண் கொண்டு வந்த உணவு பொட்டலம் ஒன்று சேர்த்தது .. "அலுமினிய" காகிதத்தில் மூடப்பட்ட உணவை "இரும்பு" இதயம் கொண்டு சுவைத்தனர் இந்த தம்பதிகள் .. ருசித்திவிட்டு கொஞ்சம் பெட்டெரா இருந்து இருக்கலாம் என்று முணுமுணுத்தனர்.  (இன்டர்நேஷனல் விமானத்தில் கூட இட்லி கேட்கும் நம்மவர்களுக்கு இந்த உணவு பிடிக்காமல் போனதில் ஆச்சர்யம் இல்லை)
மலேசியாவில் தரை இறங்கி மூன்று மணி நேரம் காத்திருந்து , சிட்னி விமானத்தில் ஜன்னல் ஒர இருக்கையில் உறங்கியபடி ஒரு வழியாக சிட்னி வந்து சேர்ந்தனர் திரு மற்றும் திருமதி பாலு.
நாடு கடத்தப்பட்ட ஊறுகாய் மற்றும் பருப்பொடிகளை இம்மிகிரேஷன் ஆஃபீஸ்ர்கள் கண்ணில் மிளகாய் தூவிவிட்டு வெளியே எடுத்துவந்தனர்.
ஏர்போர்ட் நுழைந்த இவர்களுக்கு இந்த ஊரின் மொழி , உடை , மக்கள் என அனைத்தும் அந்நியமாக இருந்தது . நேற்று வரை பொது இடங்களில் எரிச்சல் மூட்டிய சக இந்தியன் இங்கே மகிழ்ச்சியை அளித்தான்.
பிலைட்ல சாப்பாடு செம்ம மொக்க, இப்போ சாப்பிட ஏதாவது வாங்கணும்.. Preferably இந்தியன் என்று காயத்ரி சொன்னதும்.. முன் வரிசையில் நின்ற சர்தார்ஜி டீ-ஷர்ட்டில் இருந்த "YOU CAN TAKE AN INDIAN OUT OF INDIA BUT NOT INDIA OUT OF AN INDIAN” என்ற வாசகமும் கன கச்சிதமாக பொருந்தியது
கடைசிவரை இந்திய உணவு கிடைக்காத இவர்களுக்கு "ஆபத்பாந்தவனாக" வந்து அமைந்தது மெக்டொனால்ட்.... அங்குள்ள பர்கரை உண்டனர் (பர்கர் கூட இன்னும் சில நாட்களில் இந்திய உணவு பட்டியலில் இடம் பிடித்தால் ஆச்சர்யம் இல்லை)
பசியாறியவுடன் .. வீட்டாருக்கு தாம் சிட்னி வந்து சேர்ந்ததை தெரிவிக்க ஒரே வழி "ஏர்போர்ட் Free Wi-fi". “Free” என்றால் ஓட்டுக்களை கூட மாற்றிப்போடும் நமக்கு Wi-Fi மட்டும் என்ன விதிவிலக்கா?   ஒரு வழியாக வீட்டாருக்கு தகவல் சொல்லிவிட்டு உள்ளூர் சிம் கார்டு தேடுதல் பயணம் தொடங்கியது 
சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்; தேடுதல் தான் வாழ்க்கை என்று
இந்திய பாஸ்போர்ட் காண்பித்து ஆஸ்திரேலியா சிம் கார்டு வாங்கியாகிவிட்டது .. பாவம் அந்த பாஸ்ப்போர்ட்க்கு அப்போது தெரியாது , சொந்த ஊரில் "மூலவராய்" இரும்பு பெட்டியை அலங்கரித்த நிலை மாறி வந்த ஊரில் "உற்சவராய்" உலவும் நிலை வருமென்று ..

இந்நிலை பாஸ்ப்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு தான்

முற்றும்

எழுத்து 

நெ செ 

காலணி காதலி !!





காலணி காதலி !!


இன் இந்தியா மை ஷூ சைஸ் இஸ் 8” என்று சொன்னபடியே தனக்கு பிடித்தமான ஷூ ஒன்றை காண்பித்து இதில் அவன் கால்களுக்கு ஏற்ற சைஸ் இருக்கிறதா என்று வினவியபடியே அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணின் முகத்தை பார்த்தான் சீனு. வாட் எ வெள்ளைஎன்று வார்த்தையிலும் வர்ணிக்க முடியாத ஒரு அழகு அவள் முகம்... நிலவு வெண்மை நிறம் தான், இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு வெள்ளை-ங்க என்று முணுமுணுப்பதாக நினைத்துக்கொண்டு வாய் விட்டே சொல்லிவிட்டான் இந்த அப்பாவி பயல். ஆஸ்திரேலியா வந்ததும் வராததுமா இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டோமே என்று தன் அதிர்ஷ்டத்தை கண்டு வியந்தான்.
அந்த வெள்ளைக்கார...வெண்ணிலா .. இவனை பார்த்து சாரி என்று சமிஞை மூலம் இவன் சொன்னது புரியவில்லை என்றாள்.. நம்ம ஊருல ஒரு செருப்பு பக்கத்துல இருந்தாலே செம்ம அடி விழும் இதுல நாம செருப்பு கடைல வேற இருக்கோம்.. அதுனால ஜாக்கிரதையா பேசணும் என்று நினைத்து கொண்டு மெல்ல வாயை திறந்து பேச முற்பட்டான். அதற்குள் அவள், பாவம் இவனுக்கு ஆங்கிலம் தெரியாது போலும் என்று நினைத்து பரிதாபப்பட்டு சமிஞை மொழியில் எப்படிப்பட்ட காலணி வேண்டும் என்று வினவினாள் .. ஆனால் அது இவனுக்கு மட்டும் அல்ட்ரா ஸ்லோ மோஷனில் தெரிந்தது ... ஸ்லோ மோஷன் கேமரா வருவதற்கு முன்னரே கண்களை கேமெராவாக மாற்றி படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர் நம் காளையர்கள். எந்த மாடல் பிடித்து இருக்கிறது என்று அவள் கேட்க .. உன்னை போல ஒரு மாடல் உலகில் உண்ட என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டே.. பிடித்த காலணி என்று ஒன்றை இவன் காண்பிக்க.. உடனே அவள் தன் வாயை மூடி சட்டென சிரித்தாள்.. இவன் போறாத வேளை இவன் சுட்டி காட்டியது பெண்கள் அணியும் ஹீல்ஸ் செருப்பாக அமைந்தது !!
இருப்பினும் இவள் புன்னகை , முத்துக்கள் வெளியே வராமல் தடுக்க சிப்பியை சட்டென மூடியது போல இருந்தது
பொதுவாக நம் ஊரில் சுண்டினால் ரத்தம் வரும் என்பார்கள் இவளுக்கோ சுண்டணும்னு நெனச்சாலே ரத்தம் வரும் போல அந்த அளவுக்கு சிவப்பழகு. காலணி தேடி வந்தவனுக்கு ஒரு வேளை காதலி கிடைத்துவிடுமோ என்று நினைத்து மகிழ்ந்தான். இதற்கிடையில் நம்முடைய அழகிய தமிழ் மகனுக்கு நாணம் நயாகரா போல் வழிந்ததால், மேலே எதுவும் பேசாமல் .. தேங் யூ சொல்லி நகர்ந்தான்.. வீடு வரை இளையராஜா காதுகளில் ஒளிந்துகொண்டு இருந்தார், ஹெட் போன் இல்லாமல் ....(இதற்கு அவர் ராயல்டி கேட்க மாட்டார் என்று நம்புவோமாக !!)
 மறுநாள் காலை  - குட் டே மேட் !! (ஆஸ்திரேலியாவின் வழக்குச்சொல்) கிட்சன் ஷெல்ப்ல பாருடா ரெடி டு ஈட்உப்புமா இருக்கும் அத மைக்ரோ-வேவ்ல வெச்சு சூடு பண்ணு என்று இவன் ரூம் மேட் சொல்ல.. அம்மாவின் உப்புமாவை தட்டுடன் பறக்க செய்த பாவம் தன்னை பின் தொடர்ந்து வந்ததை எண்ணி, மெல்ல மைக்ரோ-வேவ் நோக்கி நகர்ந்தான்.
முதல் நாள் அலுவலகம் செல்ல பேருந்து ஏறி ஒப்பல் கார்டை தட்டி சீட் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறி அமர்ந்தான். பக்கத்துக்கு சீட்டில் நம் காலணி காதலி அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ந்தான். இதெல்லாம் தெய்வ செயல் தான் ல என்று மனதுக்குள் நினைத்தான் .. (அது என்னமோ தெரியவில்லை நம்மவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் தெய்வத்தை நாடுகிறார்கள்) என்னமோ திருமணமே முடிந்துவிட்டது போல் எண்ணி கற்பனை குதிரையை ஓட விட்டான் அதில் கண்கவர் பாடல்கள் பாடி விட்டான்.. நான்கு ஸ்டாப்புகள் தாண்டும் முன் இவன் நான்-ஸ்டாப் காதலில் மூழ்கினான்.
இவர்கள் இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள .. நாளடைவில் நட்பு மலர்ந்து ஸ்டார் பக்ஸ் காபி வரை வளர்ந்தது. மேலும் சற்று நகர்ந்து காதலானது. இதற்கிடையில் இவர்கள் ஓபரா அவுஸை” 7 -முறை சுற்றி வந்துவிட்டார்கள்.. (அதும் ஒப்பல் கார்டின் துணை இன்றி).. கல்யாணம் உங்கள் முறை படி பண்ணலாம் என்று அவள் கேட்க.. இல்லை உங்க முறை படி பண்ணலாம் என்று இவன் சொல்ல.. பெர்மனெண்ட் ரெசிடெண்சிக்கு வழி பண்ணி விட்டோமோ என்ற களிப்பில் மிதந்து .. சின்ன சின்ன சிலிமிஷன்களுடன் சென்ற காதலுக்கு வில்லனாக வந்தான் சீனுவின் ரூம் மேட்.
ஆமாம் கனவை கலைச்சவன் காதலுக்கு எதிரி தானே !! மைக்ரோ வேவில் உப்புமா வைத்து ஒரு மணி நேரம் ஆனது கூட தெரியாமல் உனக்கென்னடா தூக்கம் என்று கூறியபடி எழுப்பினான் இவனை..  கண்டதெல்லாம் கனவு தான் என்று உணர்ந்து கனத்த இதயத்துடன் போனை நோண்டிய படியே கழிவறைக்குள் பயணப்பட்டான். 
பேருந்தும் வந்தது .. அதில் காலணி காதலியும் வந்தாள்
கனவின் முதல் புள்ளி நிறைவேறியது... மீண்டும் அவள் முகத்தை ரசித்து கண்களை கவனித்து பார்த்தான். நேற்று இவள் அழகை முழுவதுமாக கண்டு கழிக்க முடியவில்லை இன்று நல்ல வாய்ப்பு என்று கீழ் நோக்கி நகர்ந்தவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் !! காலணி காதலி கர்பமாக இருந்தாள்.. முன்தினம் முகத்தை பார்த்தவன் வேறு எதையுமே கவனிக்கவில்லை என்பதை நினைத்து நொந்து .. காதல் கசக்குதய்யா என்ற ஆண் பாவம் திரைப்பட பாடலை தன் ஆப்பிள் ஏர் பாடில் கேட்டுக்கொண்டே கனத்த இதயத்துடன் பயணமானான்
சற்று நிமிடத்திற்குள் சீனுவின் காதுகளில் சத்தமாக வேறு ஒரு பெண் குரல் ஆர் யு நியூ டு சிட்னி என்றது.....இம்முறை கனவில் அல்ல நினைவில்


முற்றும்.
எழுத்து,
நெ செ