நேசமுடன் நெ செ ...
கடந்த 2 வருடங்களாக குறுங்கதைகள், கவிதைகள் என எழுதிவருகிறேன், நீங்க ஒரு "Blog" (வலைப்பதிவு) எழுதலாமே என்று பல முறை என் நண்பர்கள் கேட்ட போதெல்லாம், யோசிப்போம்... என்று சிலரிடமும்.. புத்தகமா வெளியிடலாம்னு ஐடியா இருக்கு என்று சிலரிடமும்.. சொல்லி வந்தேன்.. இப்போ என்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது... அதற்கு பதில் ரொம்ப சிம்பிள் .. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், அது எனக்கு முற்றிலும் உண்மை ஆகி போனது... என் சுக துக்கங்களில் தோள் கொடுத்த என் மனைவி என் கலை ஆர்வத்திலும் உறுதுணையாக இருந்தார்.. அப்படிப்பட்ட என் மனைவி தான் நான் BLOG எழுதவேண்டும் என்று எனக்கு நினைவு படுத்தினார். எனக்கு மகள் பிறந்து 10 நாட்களே ஆகின்றன.. ஒரு தந்தையாக அவளுடன் நேரம் செலவிட வேண்டும் என்று 3 வாரங்கள் லீவு போட்டு இருக்கிறேன்.. இந்த 3 வாரங்களில் அவ்வப்போது நேரம் கிடைக்கிறது... மேலும் கொரோனா அசச்சுறுத்தலால் வெளியே செல்லவும் முடியவில்லை.. அப்போது என் மனைவி சொன்னது நினைவுக்கு வந்ததும் ஒரு Blog (வலைப்பதிவு) எழுதலாமே என்ற என்று முடிவு செய்தேன் ... அதன் விளைவு தான் இந்த "நேசமுடன் நெ செ".....
இந்த வலைப்பதிவில் என்னுடைய குறுங்கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.. இந்த குறுங்கதைகள் நம்மை போன்ற இளையதலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.. எனவே இக்கதைகள் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் மட்டுமே இருக்கும்..
குறிப்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 3 வருடங்களாக வசிப்பதால்.. எனது கதைகளில் சிட்னி நகரத்து வாழ்கை முறையின் வாசம் வீசும்...
இதுவரை எனது கதைகள்..இனிமேல் இது உங்களுடையதும்...
நேசமுடன்,
நெ செ
No comments:
Post a Comment